twitter

Thursday 6 September 2012

போங்கய்யா நீங்களும் ஒங்க ராஜாவும்

                                 பாடல் மட்டுமே வெளியான நிலையில்
                                                  "நீதானே என் பொன் வசந்தம்"
 படத்தின் பாடல்களை போன்று  வேறு எந்த படத்தின் பாடல்களும் இது போன்று பதிவுலகில் அதிகம் பேச பட்டிருக்குமா? என தெரியவில்லை.
             "ஒரு வேளை படத்துடன் பார்த்தால் பிடிக்குமோ என்று கூட தோன்றுகிறது. இன்னும் பல முறை கேட்டால் ஒரு வேளை பிடிக்கலாமோ என்று சுரேஷ்கண்ணன் போலவே நானும் யோசிக்கிறேன்"
 என சந்தனார் http://chandanaar.blogspot.in/2012/09/blog-post_6.html என்ற தனது பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.
              பிடிக்கவில்லை என்பதை ஏற்றுக் கொள்ள பிடிவாதமனம் மறுக்கிறது.ராஜாவே உன் இசையில் தோல்வி வந்து விடக்கூடாது என்பது என் எண்ணம்."செங்காத்து பூமியிலே" பட பாடல்களை போன்ற ஒரு ஈர்ப்பை "நீதானே என் பொன் வசந்தம்" பட பாடல்கள் தரவில்லை என்பது நிச்சயம்.கவுதம் மேனனுக்கு உங்கள் இசை மேல் உள்ள நம்பிக்கை அவரது (யோகனுக்கு)அடுத்த படத்தின் இசையமைப்பாளராக யாரை அறிவிக்கிறார் என்பதிலிருந்து தெரிந்து விடும்.எனக்கு ஆஸ்கார் ராஜா தேவையில்லை.எனக்காக என் தாய் பாடிய தாலாட்டு என் ஞாபகத்தில் இல்லை. ஆனால் நீ பாடிய எத்தனையோ பாடல்கள் தாலாட்டாய் இன்னும் என்னை தூங்க வைத்துக் கொண்டிருக்கிறது.இவன் யாருடே ராஜா பாட்(டை)ட  விமர்சனம் பண்ணுதான்.இவனுக்கு என்ன தகுதியிருக்குடே அப்டின்னு நெனக்குறவங்களுக்கு , ராஜா இசையமைச்ச பாட்ட ராஜாவ விட அதிக தடவ கேட்டவங்கற தகுதி இருக்கு ன்னு சொல்லி பதிவ முடிச்சுக்கறேன்.Nee thaane en pon vasantham - NEPV