twitter

Saturday 28 June 2014

"டொக்’ என்று அடித்தது

"டொக்’ என்று அடித்தது. அவன் வண்டி என்னுடைய பம்பரில் இடித்திருந்தது.
"டொக்’" என்று மட்டும் அடித்திருந்தால் அது "ஹிந்தி படித்தே தீர வேண்டுமா? "என்ற பதிவாகியிருக்கும்.
ஆனால் அவர் "டொக்" என்று ஒருமுறை இடித்ததோடு இன்னொரு முறையும் "டொக்" என்று இடித்து விட்டார். அதாவது "டொக் டொக்" என்று.
 "அவர்" ,"விட்டார்" போன்ற மரியாதை எல்லாம் காரை வைத்து இடித்ததனால்.
ஒரு மாட்டு வண்டியாலேயோ அல்லது மிதி வண்டியாலேயோ இடித்திருந்தால் "அவன்" ,"விட்டான்" என்றே குறிப்பிடப்பட்டிருப்பார்.
"அவன் வண்டி என்னுடைய பம்பரில் இடித்திருந்தது " என அந்த பதிவர் எழுதியிருக்கிறாரே, என்று நினைத்தால் உங்கள் மூளை செயல்படுகிறது என்று அர்த்தம். அவர்(பதிவர்) அப்படி  "அவன்" என்று அவரை (கார் காரரை) எழுதியது பம்பர் வளைந்து விட்டதே என்ற கோபத்தினால்.
         ஆனால் எனக்கு கோபம் வரவில்லை.ஏனென்றால் என் வாகனத்தின் பம்பர் வளையவில்லை என்பதோடு மட்டுமல்லாமல் இடித்தது "டொக் டொக்"என்பதனால்.
காரில் இருந்து இறங்கி வந்தவரிடம் "தப்பு என்மேலதான் மன்னிச்சுக்கிடுங்க" என்றேன்.
அவரும் "தமிழ்ல எனக்கு பிடிச்ச ஒரே வார்த்தை மன்னிப்பு தான். அதனால மன்னிச்சுட்டேன்" என்றவாறே என் கையை பிடித்து குலுக்கினார்.
கை குலுக்கிய அந்த கணத்திலிருந்து நாங்களிருவரும் ("ரூம்மேட்" ,"கிளாஸ்மேட்" Glassmate அல்ல Classmate " ,பெஞ்ச்மேட்" மாதிரி) "டிராவல்மேட்" ஆகி விட்டோம்.
இந்த பதிவ படிச்ச நீங்களும் "டொக் டொக்"  ன்னு இடிச்சு "டிராவல்மேட் ஆகலாம்" ங்கறத எல்லாருகிட்டேயும்
"சொல்லுங்கண்ணே சொல்லுங்க"
குறிப்பு: பின்வரும் செந்நிற எழுத்துகளை வாசிக்கும் போது உங்களுக்குள் அந்த குரல் ஒலித்தால் நிர்வாகம் பொறுப்பல்ல.
இது போன்று (எப்போதாவது) எழுதும் பதிவுகளை இலவசமாக பெற வலப்புறத்தில் இருக்கும் "Join this site" என்பதை கிளிக் செய்யவும். அல்லது http://www.sekkaali.blogspot.com/ என்ற முகவரிக்கு வந்து படித்துக்கொள்ளவும்.

Tuesday 17 June 2014

எப்படி சொல்லி புரிய வைப்பது



 
ஒற்றை அறை
குடிசையில்
ஓரமாய் உட்கார்ந்து
அழுபவளிடம்
எப்படி சொல்லி
புரிய வைப்பது
நீ பெரியமனுசி
ஆனது தான்
அப்பன் ஆத்தாளின்
சண்டைக்கு காரணம்
என்று