நெல்லை▬பாளை▬வஉசி திடல் அருகே டீக்கடையில்.
#சல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்தில் கலந்து கொள்ள வந்திருந்த இளைஞனின் சாதியை கண்டுபிடிக்க ,'உங்க ஊரு பஞ்சாயத்து தலைவரை தெரியுமா,அவருக்கு நீங்க என்ன உறவு' போன்ற வழக்கமான கேள்விகளுக்கு கோபப்படாமல் மழுப்பலாய் பதிலளித்த இளைஞனிடம் கடைசியில் நேரடியாகவே
''தம்பி நீங்க என்ன ஆளுங்கப்பா"
என பவுன்சராய் கேள்வியை வீசியது பெருசு.
"நாங்க 'உறவர்' (உறவுக்காரன் என அர்த்தமாமாம்) ன்னு சொல்லிக்குவோம். ஒங்கள மாதிரி பண்டைய காலத்து ஆளுங்க எங்கள 'உறவன்' ன்னு சொல்லுவாங்க" என போராளி சிக்சர் பதிலடித்தான்.
'மறவன்' ன்னு இருக்கு 'குறவன்' ன்னு இருக்கு. இந்த 'உறவன்' புதுசால்ல இருக்கு . இது, 'நம்ம சாதியை விட உசந்த சாதியா இல்ல தாழ்ந்த சாதியா' என வடிவேலு மாதிரி தனக்கு தானே சொல்லிக் கொண்டு குழப்பத்தில் நகர்ந்தது பெருசு.