twitter

Tuesday 11 October 2011

கற்பனைத்து


இந்த இடுகையை எழுத காரணமாயிருந்த தோழர் திரு மபா அவர்களுக்கு நன்றி     
//சேக்காளி, ஏன் தொடர்ந்து எழுதவில்லை....?
தொடர்ந்து எழுதவும். தொய்வில்லாமல் எழுதவும்//
என்று தமிழன் வீதியை சேர்ந்த தோழர் மபா கேட்டிருந்தார்.
"ஆசைதான். ஆனால் இனம் தெரியாத ஏதோ ஒன்று தடுத்துக் கொண்டே இருக்கிறது.சோம்பேறி தனமாக கூட இருக்கலாம். ஊக்கப் படுத்துவதற்கு நன்றி."அவள் ஒரு தொடர்கதை - அன்னை ஓர் ஆலயம்". என்ற தலைப்பில் ஒரு சிறிய பதிவு எழுதலாம் என இருக்கிறேன்.தலைப்பு கவரும் படி இருக்கிறதா?.எதைப் பற்றியதாக இருக்கும் என்று கற்பனைத்து (கற்பனை செய்து) எனக்கு "பதிலாகவோ" அல்லது உங்களின் பதிவாகவோ தெரிவியுங்களேன்".என்று அவருக்கு பதிலளித்து விட்டேன்.
                        அப்புறம் தான் யோசனை வந்தது. இதனையே ஒரு பதிவாக வெளியிட்டால் என்னவென்று. 
                         நண்பர்களே நீங்களும் "அவள் ஒரு தொடர்கதை - அன்னை ஓர் ஆலயம்" எதனை பற்றியதாக இருக்கும் என்று கற்பனைத்து (இந்த கட்டுரைக்கும் தலைப்பிற்கும் தொடர்பு ஏற்படுத்தி விட்டேன்)எனக்கு பின்னூட்டமாகவோ அல்லது உங்களின் பதிவுகளாகவோ வெளியிட்டு வலையுலகை பற்றி எரிய செய்யுங்களேன்.
ஊக்கம்: தோழர் மபா, தமிழன் வீதி 
ஆக்கம்: நாந்தான் உங்க சேக்காளி.