twitter

Wednesday 21 August 2013

ஆப்பிளின் குழியும் அவளின் தொப்புளும்


           வாங்க. ஒங்கள வர வைக்கத்தான் ஆப்பிளையும் அவளையும் இழுக்க வேண்டியதா போச்சு..
நம்மாளு ஒருத்தரு ஒரு முக்கியமான பதிவ போட்டுருக்காரு. மாசம் ஒண்ணாக போவுது. ஒரு பின்னூட்டதையும் காணல. நாந்தான் போனா போவுதுன்னு ஆப்பிளையும் - அவளையும் இணைச்சு ஒரு பின்னூட்டம் எழுதினேன்.அதனால தான் என் பதிவுக்கு இந்த தலைப்பு.அப்புறம் இந்த "திரட்டிகள்" லேயும் அந்த பதிவு வந்ததா தெரியல.திரட்டிகள்ல அவரு பதிவ சேத்துருக்காரா இல்ல திரட்டிகளுக்கு அவரு பதிவ வெளியிட விருப்பமில்லையானு தெரியல.பரவாயில்ல நம்ம (நான்) அத திரும்ப வெளியிடுவோம். நம்மையும் முப்பத்தியேழு பேரு (37 ன்னு எழுதுனா சுருக்கமா இருக்குல்ல) பின் தொடருராங்க. அவுங்களும் அத படிக்கட்டும். திரட்டியிலேயும் இணைப்போம். அது மூலமாவும் படிக்கவுங்க படிக்கட்டும்.படிச்சுட்டு அடிக்கட்டும். கஞ்சிக்கும், குஞ்சிக்கும் அடிச்சுக்கும் போது இதுக்கு அடிக்க மாட்டாங்களா என்ன. யார அடிக்கணும் னு கேக்கீங்களா?."அரசியல்வாதிகள்,அதிகாரிகள்,ஆட்சியாளர்களை"  னு சொன்னா என்ன சும்மா உட்டுருவாங்களா அவுங்க.அதனால என்(னை)னத்தான் அடிக்க சொன்னேன்.எத்தன தடவ வேணும் னாலும் தெளிய வச்சு தெளிய வச்சு அடிக்கலாம். நான்  கேட்டா, "நான் அடிச்சது காலையில","நான் அடிச்சது மத்தியானம்","நான் அடிச்சது சாயங்காலம்","நான் அடிச்சது  ராத்திரி","நான் அடிச்சது நேத்து","நான் அடிச்சது போன வாரம்","நான் அடிச்சது போன மாசம்" அப்படின்னு சொல்லிட்டு என்ன திரும்பவும் அடிக்கலாம்.அவங்கவுங்க சொந்த வேலையினால மறந்து போச்சுன்னா ஒரு வருசம் கழிச்சு வந்தும் அடிக்கலாம்.
அடிக்க ஆரம்பிக்கதுக்கு முன்னால அவரு பதிவையும் அதுக்கு நான் எழுதுன பின்னூட்டத்தையும் படிங்க.அப்பந்தான் இந்த பதிவோட அர்த்தம் வெளங்கும்.இல்லேன்னா இந்த நாடு வெளங்காம போய்ட்டு இருக்கற மாதிரி இந்த பதிவோட தலைப்புக்கும் அர்த்தம் வெளங்காமலேயே போய்ரும்.

அவரோட பதிவுக்கு போக
http://maniblogcom.blogspot.com/2013/07/blog-post_24.html
திருட்டு விசிடி, டிவிடி பாக்கற பழக்கம் உள்ளவங்களுக்கு

 அய்யய்யோ, அய்யய்யோ, கடற்கரை காணமல் போகுதே ?

      கடல் நீரை குடிநீர் ஆக்கும் திட்டம். ஆகா. எத்தனை அழகான திட்டம். வெங்காயம். எவன்யா சொன்னான் அழகான திட்டம்னு?  ஆமாம்.மாநிலமெங்கும் "தண்ணீர்" கிடைக்காதபோது, அது அழகான திட்டம்தானே? யோவ். கடல்னா என்னனு தெரியுமா? கடல் நீர்னா  என்னனு புரியுமா? அதுல இருக்கற உப்பு எப்படிப்பட்டதுணி அறியுமா? அதிலிருந்து "உப்பை நீக்கி குடிநீர்" ஆக்கினா,என்னாகும்னு விளங்குமா? இப்போ "சூளேரி காட்டுகுப்பத்துல" ஒரு டிசேலிநேசன் பிளான்ட் இருக்கே? கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் நால்லாதானே போய்க்கிட்டு இருக்கு? எவனய்யா சொன்னான்?  முதல்ல மீனவர் சங்கத்துகாரங்க, "இது ஆபத்தான திட்டம்னு" சொல்லியும் அந்த ஊர் சனம் கேக்கல.இப்போ அடிச்சிக்கிறாங்க,வயித்துல?  ஏன்? கடலுக்கு மீன் பிடிக்க போன ஒரு மீனவர் இந்த திட்டத்திற்காக கட்டிய "கடலுக்குள் சுவர்" என்பதில் படகு மோதி இறந்தார்.கடல் நீர் ஊருக்குள் வரத்தொடங்கி, ஊரையே "காலி" செய்யும் நிலைமை வந்துவிட்டது.

                   கடல் நீரை எடுக்கும் "குழாயில்" சிறிய மணல் உள்ளே நுழைந்து, அந்த "ஆலை" பழுதாகி, ஒரு குழாயில் உற்பத்தி பாதிப்பு. அதன்மூலம் கொட்டிவாக்கம் வரை குடிநீர் கொடுத்து வந்த "சென்னை குடிநீர் வாரியம்" ஒரு வாரத்திற்கு மேல் குடிநீர் கொடுக்க முடியவில்லை. அத்தகைய "குடிநீரும்" எப்படி இருக்கும்? மயிலாப்பூர் நொச்சி குப்பத்தில் ஒரு "டிசெலினெசன் பிளான்ட்" "டீம்" என்ற  பெயரில் அரசு நிறுவனம் பல ஆண்டுகளாக இருக்கிறது. அதில் முதல் நாள் தண்ணீர் சுவையாக இருக்கும் அய்யா.மூன்றாம் நாள் "புழு நெளியும்" அய்யா. என்கிறார்கள். இதிதான் அனுபவம் என்றால், ஏன் இந்த அதிகாரிகள் இப்படி "தவறான திட்டத்தை" ஆலோசனை கூறி அரசை அசிங்கப் படுத்துகிறார்கள்? அவர்கள் என்ன சொல்கிறார்கள்? துபாயில் இந்த திட்டம் இருக்கிறதே? என்கிறார்கள். அய்யா, அங்கே நிலத்தின் அடியில் நீர் எடுக்க முடியாது. பாலைவனம். நம்ம ஊர்ல "ஒழுங்கா ஏரி, குளம்",என்று மூதாதையர்களால் தோண்டப்பட்டவற்றை  "பராமரித்தாலே" போதுமே?   அதுல போய் "பிளாட் போட்டு விக்கறீங்க". ஏரி,குளம், தூர் வாரி ஆழப்படுத்த "அரசுக்கும், அதிகாரிகளுக்கும் துப்பில்லை". கடல்ல போய்  ஒங்க விளையாட்டை காட்டறீங்க. அது திருப்பி அடிக்குது.

             நீங்க எடுக்கற கடல் உப்பின் "கழிவு உப்பை" கடலிலேயே கொட்டறீங்களே? அடர்த்தியான உப்பு காரணமாக அது "மீன் வளத்தை"  அழிக்காதா? என்ன மூளை அய்யா உங்களுக்கு? கடலை பற்றி ஒன்னும் விளங்கலைனா, மீனவர்களை  கூப்பிட்டு கேளுங்கய்யா?  உங்க "நிலம் சார்ந்த உலக சிந்தனையை" கடல் வாழ் பழங்குடிகளான மீனவர்கள் மீது ஏன் "திணிக்கிறீங்க?" கடற்கரை முழுக்க இப்போ "சூளேரி காட்டு  குப்பத்தில்" அரிக்கப்பட்டு விட்டதே? அதை ஈடுகட்ட "பாரங்கல்களை" போடும் அதிகாரிகளே, உங்கள் மூளையில் இருப்பது "பாரங்கல்களா?" துபாயில் மட்டும் எப்படி இந்த திட்டம் வெற்றி அடிக்கிறது? என்று கேட்கிறீர்களே? அங்க "கரையோர மீன்பிடி தொழில்"நம்ம ஊரைப் போல கிடையாது. அங்க "ஆழ்கடல் மீன்பிடி" மட்டும்தான். அதனால் நீங்க கரையோரம் "பாரங்கல்லை" போட்டாலும், போடாவிட்டாலும், அது மீன் பிடி தொழிலை ஒன்றும் செய்யாது. இந்த லட்சணத்தில், தமிழக அரசு, தமிழக கடற்கரையோரம் "நூறு டிசேலிநேசன் பிளான்ட்" கொண்டுவர திட்டமிடுகிறதாம்.அது எப்படி இருக்கு?

               துபாயில் ஒவ்வொரு கடலோர ஊருக்கும் இடையில் நூற்றுக் கணக்கான மைல் தூரம் இருக்கு. தமிழக கடற்கரை மொத்தம் இருக்கற "ஆயிரம் கிலோமீட்டரில்" பத்து கிலோ மீட்டருக்கு ஒரு மீனவர் கிராமம் இருக்கு. அந்த கடலோர கிராமங்கள் என்னாகும்? இதற்க்கு பெயர் "மீனவர் நண்பர் ஆட்சியா?" மீனவர் விரோத ஆட்சியா? நிலம்சார்ந்த உலகின் அரசியல்வாதிகளே,அதிகாரிகளே, ஆட்சியாளர்களே, நீங்கள் இனி "கடல்சார்ந்த உலகின் " மீனவ மக்களையோ, அவர்களின் கடற்கரையையோ, கடலையோ" தொட்டு அழிக்க முற்பட்டால், இங்கொரு "சோமாலியா" உருவாவதை தடுக்க முடியாது? சோமாலியாவின் கடல்சார் மீனவ மக்களை ஏகாதிபத்தியம் அழித்ததால் தான் அவர்கள் இன்று," கடல் கொள்ளைக்காரர்களாக" உருவாகி உங்களது உலகத்திற்கே சிம்ம சொப்பனமாக மாறி இருக்கிறார்கள். நினைவில் வைத்து கொள்ளுங்கள். இங்கும் அப்படி ஒரு நிலையை அரசு தோற்றுவிக்கத்தான், "சூளேரி காட்டு குப்பங்கள்" உருவாக்க விரும்புகிறதா?
1 comment:
சேக்காளி said...
    ஒரே நாள்லேயா ஒலகம் அழிஞ்சுர போவுது. கொஞ்சம் கொஞ்சமா தானே அழியும்.அதுக்கு போயிட்டு இப்படி கூப்பாடு போடுதியளே.இந்த பதிவ எத்தன பேரு படிச்சாங்கன்னு தெரியல.பின்னூட்டதுல ஒன்னையும் காணலேங்க போது மக்களுக்கு அக்கறை எம்புட்டு இருக்குன்னு தெரிஞ்சுக்க முடியுது. ஆப்பிளின் காம்பு இருக்கும் குழி போல் அந்த(ஏதாவது ஒரு நடிகை) நடிகையின் தொப்புள் இருக்கிறது என்று ஒரு படத்தின் நாயகியை வர்ணித்து திரை விமர்சனம் எழுதுவியளா. அத உட்டுட்டு.
August 21, 2013 at 12:46 AM

Thursday 30 May 2013

சசிகுமாரின் சாதி

 
                 சசிகுமாரின் படங்கள் மட்டும் ஏன் தேவர் சாதியினை குறி வைத்து எடுக்கிறார்கள். குட்டிப்புலி விமர்சனம்.
http://www.amsenthil.com/2013/05/blog-post_30.html.
படித்து விட்டு பின்னூட்டமிடவும்.
பின்னூட்டங்கள் நீக்கப்படாது.

Thursday 24 January 2013

விஸ்வரூபம் விமர்சனம்

மலேசியாவில் படம் வெளியாகி...விமர்சனமும் வந்து விட்டது.
இதோ விமர்சனம்...
Vishwaroopam gets magnum opus response in malaysia (Here are some response the film received from malaysian viewers 

"Dhool opening. 
Kamal appears and whistle clap fills the hall 
A treat is in store
Openinh song wow"

"Stark realities behind terrorist breeding places.
Have never seen anything like this before.
Not a single irrelevant scene. Lesson on direction for everyone.
Lots of subtle humor"

"What a transformation.
Need many watches. Once isn't enough.
Some parts we feel sympathy for the terrorists"

"Phew..... what a roller coaster ride.....!
All of us are insatiated ... we want more. Please bring on part 2 quickly.
My children thought it was intermission when the movie ended!
2.5 hours of non stop action.
This is what I want from kamal.
Movie of the decade for sure.
Guys in India. .. it is worth the wait"

Courtesy:
http://www.twitlonger.com/show/kq8l74