twitter

Thursday 27 August 2015

சதுரங்கன்

திரைப்படங்களில் ஒருவரையொருவர் நக்கல் நையாண்டி கேலி கிண்டல் செய்து புகழ்பெற்றவர்கள் கவுண்டமணி - செந்தில்.
 அதே போன்ற இரு பாத்திரங்களுக்கான பெயர்களை கற்பனைத்திருக்கிறேன்.
ஒருவர் "ரானா" .
இவர் வயதில் பெரியவர்.எங்கூர் பக்கம்  "ர" என்ற எழுத்தில் ஆரம்பிக்கும் பெயருடையவர்களை அப்படி அழைப்பது வழக்கம்.
 மற்றொருவன் சதுரங்கன்.
 வயதில் சிறியவன். குறுக்குமறுக்காய் கேட்பான்.இடக்குமடக்காய் பதிலளிப்பான்.
அவர்களின் முதல் உரையாடல் இதோ
ரானா:
எலேய்!  "சதுரங்கன்" னு ஒனக்கு நீயே பேரு வச்சிருக்கியாமுல்ல? அதென்னடே சதுரங்கன்?
சதுரங்கன் :
"ஸ்ரீரங்கன்" ன்னு பேரு இருக்கும் போது "சதுரங்கன்" னு இருக்கக் கூடாதா?.நம்மூர்ல ஆடுபுலிஆட்டம் வெளயாடுறா மா(தி)ரி படிச்சவுங்க வெளயாடுற ஒரு வெளயாட்டு செஸ்.நீரு செக்ஸ் ன்னு நெனச்சுராதேரும்.ஏஞ்சொல்லுதேம்னா இருவத்து நாலு மணி நேரமும் ஒம்ம நெனப்பு அப்பிடி.அந்த செஸ் வெளயாட்ட தமிழ்ல "சதுரங்கம்" ன்னு சொல்லுவாங்க.ரொம்ப விறுவிறுப்பான வெளயாட்டாம்.அதே மா(தி)ரி எப்பவும் விறுவிறுப்பா இருக்கணும் னு  நெனச்சுக்கிட்டு எனக்கு நானே வச்சுகிட்ட பேரு.
ரானா:
அதாவது  "எந்திரம்" ங்கறத மாத்தி "எந்திரன்" ன்னு வச்சா மா(தி)ரி ன்னு சொல்லுத.
சதுரங்கன் :
ஆமா.பெருசுன்னா பெருசு தான்.கப்பு ன்னு புடிச்சிக்கிட்டேரே. சரி சரி புதுசா பேரெல்லாம் வச்சிருக்கேன். "நால்லா இரு" ன்னு ஆசிர்வாதம் பண்ணுமுய்யா.
ரானா :
ஆசிர்வாதம் பண்ணுவேன் ஆனா துட்டு கேக்கக்கூடாது சரியா.

1 comment:

  1. ஹா==ஹா==சூப்பரூஊஊஊஊஊஊஊ====

    ReplyDelete