twitter

Tuesday 29 August 2017

கல்லும் கடவுளும்




நாத்திகம் பேசிய அகராதி சிற்பியை
அவமதிக்க நினைத்து,
"அம்மி கொத்துவீர்களா" என்றேன்.

"அதனாலென்ன
அதுவும் தொழிலில் ஒரு வகை தானே"
எனக் கொத்தித் தந்தான்
ஆண்டவன் உருவத்தை.
                                         
நேற்றுவரை இருந்த கல் தானே
என அரைக்கவும் முடியாமல்
இன்றெனக்கு கிடைத்த கடவுள்
என வணங்கவும் முடியாமல்
நான்

3 comments:

  1. நாங்கள் மந்திரம் ஓதினால் தான் கற்சிலை கடவுளாகும் என்று மக்களை மடையர் ஆக்கும் ஒரு கூட்டம் சொல்கிறதே :)

    ReplyDelete
    Replies
    1. ஆமாம்.
      சூத்திரர்களின் கையால் உருவான சிலைகளை கடவுளாக்குவதற்காக தான் பிரதிஸ்டை செய்கிறார்கள்

      Delete