twitter

Tuesday, 29 November 2011

மலையாளியின் கவலை

               குவைத்தில் வசிக்கும் மலையாளி ஒருவர் பெரியார் அணை உடைந்தால் தன் மாநில மக்கள் பாதிக்கப் படுவார்களே என்பதை விட தமிழர்களாகிய நாம் அவர்களை பார்த்து சிரிப்போம் என்ற கவலையில் கீழ் கண்டவாறு கேரள மக்களுக்கு வலைமனையி(internet)ல் எச்சரிக்கை கொடுத்துள்ளார்.அணை உடைந்து அவர்களை பார்த்து சிரிப்பதற்கு முன்பே இவரின் கவலையை நினைத்து சிரிப்பு வருவதை என்னால் அடக்க முடியவில்லை. உங்களுக்கு
Advt # : 479765
posted by Sebin
Location Salmiya

Dont invest in property in Kochi/Trissure/Idukki for time being.
Beware!!!!!!!

It is a very confidential news which leaked out from officials.

Don’t investment money on buying houses or villas in Ernakulam / Kochi District areas for sometimes. Because Mullaperiyar Dam’s situation is very bad as 50/50. Something can happen or may not. Once the Dam is broken, the EKM will be the first amongst other three districts which will be completely covered by water!!!!!!

Once you drown in water, Tamil people will be laughing at me and they will " pooontu vilayadum”.
So "Jagrathai."
http://www.indiansinkuwait.com/myIIK/ShowAdvt.aspx?ID=479765

Friday, 4 November 2011

வேரானவள் வேறானாள்(ல்)


திரை உலகை
திரள வைத்த சாவு
உன்னை மட்டும்
குழற வைத்த சாவு


சாகாவரங்கள் உன்
இணைக்கல்ல
இசைக்கே


வேரானவள்
வேறானாள்(ல்) என்ன
விழுதுகள் எப்போதும்
உனை தாங்கி நிற்கு(போ)ம்

ஜீவா சென்றாள்(ல்) என்ன
அவள் ஜீவன் உன்னோடுதானே

ராசாவே

எங்கிருந்தோ அழைக்கும் என் ஜீவன் ஒரு ஜீவன் அழைத்தது
எங்கே என் ஜீவனே போன்ற உன் குரல்களையே உனக்கு ஆறுதலாக சொல்லும்


நேரில் வர முடியாத
சேக்காளி

Thursday, 3 November 2011

உதவி

வாசல் வரைக்கும்  செல்ல
சொந்த வாகனங்கள்
உதவத்தான் செய்கிறது
         
                ஆம்

மருத்துவமனையின்
வாசலுக்கும் கூட.

Tuesday, 11 October 2011

கற்பனைத்து


இந்த இடுகையை எழுத காரணமாயிருந்த தோழர் திரு மபா அவர்களுக்கு நன்றி     
//சேக்காளி, ஏன் தொடர்ந்து எழுதவில்லை....?
தொடர்ந்து எழுதவும். தொய்வில்லாமல் எழுதவும்//
என்று தமிழன் வீதியை சேர்ந்த தோழர் மபா கேட்டிருந்தார்.
"ஆசைதான். ஆனால் இனம் தெரியாத ஏதோ ஒன்று தடுத்துக் கொண்டே இருக்கிறது.சோம்பேறி தனமாக கூட இருக்கலாம். ஊக்கப் படுத்துவதற்கு நன்றி."அவள் ஒரு தொடர்கதை - அன்னை ஓர் ஆலயம்". என்ற தலைப்பில் ஒரு சிறிய பதிவு எழுதலாம் என இருக்கிறேன்.தலைப்பு கவரும் படி இருக்கிறதா?.எதைப் பற்றியதாக இருக்கும் என்று கற்பனைத்து (கற்பனை செய்து) எனக்கு "பதிலாகவோ" அல்லது உங்களின் பதிவாகவோ தெரிவியுங்களேன்".என்று அவருக்கு பதிலளித்து விட்டேன்.
                        அப்புறம் தான் யோசனை வந்தது. இதனையே ஒரு பதிவாக வெளியிட்டால் என்னவென்று. 
                         நண்பர்களே நீங்களும் "அவள் ஒரு தொடர்கதை - அன்னை ஓர் ஆலயம்" எதனை பற்றியதாக இருக்கும் என்று கற்பனைத்து (இந்த கட்டுரைக்கும் தலைப்பிற்கும் தொடர்பு ஏற்படுத்தி விட்டேன்)எனக்கு பின்னூட்டமாகவோ அல்லது உங்களின் பதிவுகளாகவோ வெளியிட்டு வலையுலகை பற்றி எரிய செய்யுங்களேன்.
ஊக்கம்: தோழர் மபா, தமிழன் வீதி 
ஆக்கம்: நாந்தான் உங்க சேக்காளி.

Thursday, 25 August 2011

அன்னா ஹஜாரேவை ஆதரிக்க சென்றவர் சுட்டு கொலை


சுதந்திர தினத்துக்கு அடுத்த நாள் அன்னா ஹஜாரே போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கப் புறப்பட்ட சமூகப் போராளி ஷீலா மசூத்தை அவரது காரில் வைத்தே சுட்டு கொன்று விட்டார்கள்.மத்திய பிரதேசத்தில் சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் சுரங்கத்தை எதிர்த்து போராடிய காரணத்தால் இவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது வெளிப்படையாக தெரிந்தாலும்,காரணம் தெரியவில்லை என்று கை விரிக்கிறது போலீஸ்.
இத்தனைக்கும் தன்னுடைய உயிருக்கு ஆபத்து இருப்பதாக போலீஸில் ஏற்கனவே புகார் அளித்திருந்திருக்கிறார் ஷீலா மசூத்.லஞ்சத்தில் இருந்து நாட்டை காப்பாற்ற புறப்பட்ட ஷீலா மசூத்தை காப்பாற்ற நம் சனநாயகத்தால் முடியவில்லை.இந்தியாவெங்கும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் துணை கொண்டு அநியாயங்களை எதிர்த்து போராடியதற்காக மரணமடைந்திருக்கும் 12வது நபர் ஷீலா மசூத்.
நன்றி
கழுகார் பதில்கள்.
24-ஆகஸ்டு-11 ஜூனியர் விகடன்.
மேலும்http://www.inneram.com/2011081718445/ips-officer-behind-rti-activist-masood-murder
http://www.sivajitv.com/news/bopal-hasaray-aatharavaalar-murder.htm

Wednesday, 10 August 2011

திரையில் வருமுன் "மங்காத்தா" வலையில் - MANKATHA

              உச்ச நட்சத்திரத்தின் வாரிசு மகளுக்கு திரைப்படம் தயாரிக்கும் ஆசை வந்தது.அதனை இயக்க அவள் தேர்ந்தெடுத்த இயக்குநர் முதல் பாடலுக்கே தேசிய விருது பெற்ற பாடலாசிரியரின் மகன்.அந்த இயக்குநர் தனது படத்திற்கு இசையமைப்பாளராய் தேர்ந்தெடுத்தது இசையின் இளைய மைந்தனை.இத்தனை உச்ச வாரிசுகளுக்கும் நடுவில் கதாநாயகன் எந்த வித பின்புலமும் இல்லாமல் திரையில் அறிமுகமாகி இந்த படத்தில் தனது அரை சதத்தினை கடக்க இருக்கும் ஆசை நாயகன்.இந்த கலவையில் படத்தின் மதிப்பு எகிறவே அப்போது ஆண்டவனின் வாரிசு பார்வையை மாற்றியது இந்த திரைப்படத்தின் மேல்.
               உள்ளே வெளியே நடைபெற்ற மங்காத்தாவில் உச்ச நட்சத்திர வாரிசு மகளின் பெயர் சத்தமின்றி தயாரிப்பாளர் தகுதியிலிருந்து நீக்கப்பட்டது.ஆண்டவனின் வாரிசு என்பதால் மட்டுமே அது தயாரிப்பாளர் பெயராய் சேர்க்கப் பட்டது.
இங்கே "இது அம்பானி பரம்பரை" என்ற இந்த பாடல் நினைவிற்கு வந்தால் நான் பொறுப்பல்ல.
ஆளும் வர்க்கத்திற்கும் ஆளப்பட்ட வர்க்கத்திற்கும் நடைபெற்ற மங்காத்தாவில் ஆண்ட வர்க்கம் அதிரடியாய் ஆட ஆளப்பட்ட வர்க்கம் அமைதியாய் ஆடி அரியணையை, "இலவசமாய் அரிசி தருகிறேன் என்ற அரசி" யிடம் ஒப்படைத்தது.
நாளை, இன்று இப்போது என பாடல்கள் வெளியிடப்படும் நாளை ஒருவாறாக முடிவு செய்து அறிவித்த பின் "நான் கொண்ட கொள்கையிலிருந்து எப்போதும் மாறுவதில்லை.எனவே பாடல் வெளியீட்டு விழாவிற்கெல்லாம் வர மாட்டேன்" என்று தலை ஆடியது மங்காத்தா.

இது ஒரு புறம் நடைபெற்றுக்கொண்டிருக்க இசையின் வாரிசு அமைதியாய்
                    1.ஒரு பாடலை மட்டும் வெளியிட்டு மக்கள் நாடித்துடிப்பை கண்டது.
                     2. அடுத்து பாடல் விபரங்கள் அடங்கிய குறுந்தகட்டின் உறையை மட்டும் வெளியிட்டு மக்களிடையே பாடல் கேட்கத் தூண்டும் ஆவலை உயரச்செய்தது.
                   தலை ஆடிய மங்காத்தாவினால் அமைதியான முறையில் பாடல் நேரிலும்,தபால் மூலமாகவும் வெளியானாலும் அதிவிரைவாய் மக்களிடையே பரவும் வதந்திகளை விட வேகமாய் இணையத்தில் வெளியாகி விட்டது.
              இந்நிலையில் படம் வெளியாகப் போகும் நாள் அறிவிக்கப்பட்டது.ஆனாலும் அந்நாளில் படம் வெளியாகுமா? என்ற ஆவல் படக்குழுவினரோடு,திரையுலகத்தினரோடு, ரசிகர்களுக்கும் தான்.
                                                                        காரணம்
"இலவச அரிசி தந்த அரசி"யின் ஆட்சியில் "ஆண்டவன் வாரிசு" தயாரித்த படம் வெளி வருமா?
அதுவரை விளையாடு மங்காத்தா விட மாட்டா எங்காத்தா

Thursday, 28 July 2011

ஃபேஸ் புக் - வேறு பார்வை

                            இன்று பெரும்பாலான பதிவர்கள் "ஃபேஸ் புக்" கை தமிழாக்கும் போது "முகநூல்" என்று குறிப்பிடுகிறார்கள். Booking (Book) என்பதற்கு பதிவு என்ற பொருளும் உண்டு. ஆகையால் நாம் "முக பதிவு" என்று "Facebook" ஐ கூறலாம் அல்லவா?.
கருத்து சொல்லுங்கள்.ஏற்புடையதாய் இருந்தால் தெரிந்தவர்களிடமெல்லாம் பரப்புங்கள்.