twitter

Thursday, 6 September 2012

போங்கய்யா நீங்களும் ஒங்க ராஜாவும்

                                 பாடல் மட்டுமே வெளியான நிலையில்
                                                  "நீதானே என் பொன் வசந்தம்"
 படத்தின் பாடல்களை போன்று  வேறு எந்த படத்தின் பாடல்களும் இது போன்று பதிவுலகில் அதிகம் பேச பட்டிருக்குமா? என தெரியவில்லை.
             "ஒரு வேளை படத்துடன் பார்த்தால் பிடிக்குமோ என்று கூட தோன்றுகிறது. இன்னும் பல முறை கேட்டால் ஒரு வேளை பிடிக்கலாமோ என்று சுரேஷ்கண்ணன் போலவே நானும் யோசிக்கிறேன்"
 என சந்தனார் http://chandanaar.blogspot.in/2012/09/blog-post_6.html என்ற தனது பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.
              பிடிக்கவில்லை என்பதை ஏற்றுக் கொள்ள பிடிவாதமனம் மறுக்கிறது.ராஜாவே உன் இசையில் தோல்வி வந்து விடக்கூடாது என்பது என் எண்ணம்."செங்காத்து பூமியிலே" பட பாடல்களை போன்ற ஒரு ஈர்ப்பை "நீதானே என் பொன் வசந்தம்" பட பாடல்கள் தரவில்லை என்பது நிச்சயம்.கவுதம் மேனனுக்கு உங்கள் இசை மேல் உள்ள நம்பிக்கை அவரது (யோகனுக்கு)அடுத்த படத்தின் இசையமைப்பாளராக யாரை அறிவிக்கிறார் என்பதிலிருந்து தெரிந்து விடும்.எனக்கு ஆஸ்கார் ராஜா தேவையில்லை.எனக்காக என் தாய் பாடிய தாலாட்டு என் ஞாபகத்தில் இல்லை. ஆனால் நீ பாடிய எத்தனையோ பாடல்கள் தாலாட்டாய் இன்னும் என்னை தூங்க வைத்துக் கொண்டிருக்கிறது.இவன் யாருடே ராஜா பாட்(டை)ட  விமர்சனம் பண்ணுதான்.இவனுக்கு என்ன தகுதியிருக்குடே அப்டின்னு நெனக்குறவங்களுக்கு , ராஜா இசையமைச்ச பாட்ட ராஜாவ விட அதிக தடவ கேட்டவங்கற தகுதி இருக்கு ன்னு சொல்லி பதிவ முடிச்சுக்கறேன்.Nee thaane en pon vasantham - NEPV

Thursday, 26 April 2012

உன் சமையல் அறையில் - un samayal arayil

     
     தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுக்கும் எத்தனையோ இரவுகள் என்னை தூங்க வைத்துக் கொண்டிருப்பது திரு.இளையராஜா அவர்கள் இசையமைத்த பாடல்கள்தான். "திரு.இளையராஜா அவர்கள்" அன்னியமாய் படுவதால் இனி "இளையராஜா" என்றே தொடரலாம் என்று நினைக்கிறேன்.
பாடல் பதிவகங்களுக்கு சென்று பாடல்களை நாட்கணக்கில் தேடி ஒலி நாடாக்களில் பதிந்து கேட்டு ரசித்த ரசனை இன்னும் கொஞ்சம் கூட குறையாமல் இந்த கணிணி யுகத்திலும் அப்படியே தொடர்கிறது எனக்கு.இன்னும் திரைக்கு வராத "படித்துறை" படத்தின் டிரைலரில் ஒலித்த ஒரு சில வரிகளை MP3 பாடல்களாக்கி கேட்டுக் கொண்டிருக்கிறேன் என்றால் இளையராஜா மீது எனக்குள்ள கோட்டி எப்படி பட்டதென தெரிந்து கொள்ளலாம்.
     இப்படி பட்ட எனக்கு சமீபத்தில் வெளியான தோனி நாட் அவுட்(தோல்வியுறா தோனி) என்ற படத்தில் ஹரிஹரனும்,ஸ்ரேயா கோஷலும் தனித்தனியாய் பாடி வெளியான "விளையாட்டா பட கோட்டி" பாடலை கேட்டதும் அதனை டூயட் பாடலாய் கேட்டு விடவேண்டுமென்ற கோட்டி பிடித்தது.வலைதளத்தில் தேடிப் பார்த்தேன்.கிடைக்கவில்லை என்றால் விட்டு விடக்கூடிய கோட்டியா எனக்கு பிடித்தது. இல்லையில்லை.கேட்டால் தான் அடங்கும் கோட்டி அது.அவ்வேளையில் தான் உள்மனம் "நீயே உருவாக்கு" என்று உளறி, வென்றும் காட்டியது.
இப்போதெல்லாம் இரவு தூங்கு முன் ஒரு முறையாவது
 "விளையாட்டா படகோட்டி"
என்ற இந்த டூயட் பாடலை கேட்டால் தான் இந்த கோட்டிகாரனுக்கு தூக்கமே வருகிறது. தூக்கத்தில்,
இயக்குநர் :  பிரகாஷ் ராஜ்
இசையமைப்பாளர் : இளையராஜா
பாடலாசிரியர் : முத்துக்குமார்
பாடகர்                     : ஹரிஹரன்
பாடகி : ஸ்ரேயா கோஷல்
  ஆகிய அனைவரும் உரிமை பெறாமல் இப்பாடலை இணையத்தில் வெளியிட்ட குற்றத்திற்காக நீதிமன்றத்தில் வழக்கு தொடருவதாக கனவு வருகிறது.கோட்டிக்காரன் மீது நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்ய வாய்ப்பு இருக்கிறதா? விபரம் தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்.

Tuesday, 29 November 2011

மலையாளியின் கவலை

               குவைத்தில் வசிக்கும் மலையாளி ஒருவர் பெரியார் அணை உடைந்தால் தன் மாநில மக்கள் பாதிக்கப் படுவார்களே என்பதை விட தமிழர்களாகிய நாம் அவர்களை பார்த்து சிரிப்போம் என்ற கவலையில் கீழ் கண்டவாறு கேரள மக்களுக்கு வலைமனையி(internet)ல் எச்சரிக்கை கொடுத்துள்ளார்.அணை உடைந்து அவர்களை பார்த்து சிரிப்பதற்கு முன்பே இவரின் கவலையை நினைத்து சிரிப்பு வருவதை என்னால் அடக்க முடியவில்லை. உங்களுக்கு
Advt # : 479765
posted by Sebin
Location Salmiya

Dont invest in property in Kochi/Trissure/Idukki for time being.
Beware!!!!!!!

It is a very confidential news which leaked out from officials.

Don’t investment money on buying houses or villas in Ernakulam / Kochi District areas for sometimes. Because Mullaperiyar Dam’s situation is very bad as 50/50. Something can happen or may not. Once the Dam is broken, the EKM will be the first amongst other three districts which will be completely covered by water!!!!!!

Once you drown in water, Tamil people will be laughing at me and they will " pooontu vilayadum”.
So "Jagrathai."
http://www.indiansinkuwait.com/myIIK/ShowAdvt.aspx?ID=479765

Friday, 4 November 2011

வேரானவள் வேறானாள்(ல்)


திரை உலகை
திரள வைத்த சாவு
உன்னை மட்டும்
குழற வைத்த சாவு


சாகாவரங்கள் உன்
இணைக்கல்ல
இசைக்கே


வேரானவள்
வேறானாள்(ல்) என்ன
விழுதுகள் எப்போதும்
உனை தாங்கி நிற்கு(போ)ம்

ஜீவா சென்றாள்(ல்) என்ன
அவள் ஜீவன் உன்னோடுதானே

ராசாவே

எங்கிருந்தோ அழைக்கும் என் ஜீவன் ஒரு ஜீவன் அழைத்தது
எங்கே என் ஜீவனே போன்ற உன் குரல்களையே உனக்கு ஆறுதலாக சொல்லும்


நேரில் வர முடியாத
சேக்காளி

Thursday, 3 November 2011

உதவி

வாசல் வரைக்கும்  செல்ல
சொந்த வாகனங்கள்
உதவத்தான் செய்கிறது
         
                ஆம்

மருத்துவமனையின்
வாசலுக்கும் கூட.

Tuesday, 11 October 2011

கற்பனைத்து


இந்த இடுகையை எழுத காரணமாயிருந்த தோழர் திரு மபா அவர்களுக்கு நன்றி     
//சேக்காளி, ஏன் தொடர்ந்து எழுதவில்லை....?
தொடர்ந்து எழுதவும். தொய்வில்லாமல் எழுதவும்//
என்று தமிழன் வீதியை சேர்ந்த தோழர் மபா கேட்டிருந்தார்.
"ஆசைதான். ஆனால் இனம் தெரியாத ஏதோ ஒன்று தடுத்துக் கொண்டே இருக்கிறது.சோம்பேறி தனமாக கூட இருக்கலாம். ஊக்கப் படுத்துவதற்கு நன்றி."அவள் ஒரு தொடர்கதை - அன்னை ஓர் ஆலயம்". என்ற தலைப்பில் ஒரு சிறிய பதிவு எழுதலாம் என இருக்கிறேன்.தலைப்பு கவரும் படி இருக்கிறதா?.எதைப் பற்றியதாக இருக்கும் என்று கற்பனைத்து (கற்பனை செய்து) எனக்கு "பதிலாகவோ" அல்லது உங்களின் பதிவாகவோ தெரிவியுங்களேன்".என்று அவருக்கு பதிலளித்து விட்டேன்.
                        அப்புறம் தான் யோசனை வந்தது. இதனையே ஒரு பதிவாக வெளியிட்டால் என்னவென்று. 
                         நண்பர்களே நீங்களும் "அவள் ஒரு தொடர்கதை - அன்னை ஓர் ஆலயம்" எதனை பற்றியதாக இருக்கும் என்று கற்பனைத்து (இந்த கட்டுரைக்கும் தலைப்பிற்கும் தொடர்பு ஏற்படுத்தி விட்டேன்)எனக்கு பின்னூட்டமாகவோ அல்லது உங்களின் பதிவுகளாகவோ வெளியிட்டு வலையுலகை பற்றி எரிய செய்யுங்களேன்.
ஊக்கம்: தோழர் மபா, தமிழன் வீதி 
ஆக்கம்: நாந்தான் உங்க சேக்காளி.

Thursday, 25 August 2011

அன்னா ஹஜாரேவை ஆதரிக்க சென்றவர் சுட்டு கொலை


சுதந்திர தினத்துக்கு அடுத்த நாள் அன்னா ஹஜாரே போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கப் புறப்பட்ட சமூகப் போராளி ஷீலா மசூத்தை அவரது காரில் வைத்தே சுட்டு கொன்று விட்டார்கள்.மத்திய பிரதேசத்தில் சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் சுரங்கத்தை எதிர்த்து போராடிய காரணத்தால் இவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது வெளிப்படையாக தெரிந்தாலும்,காரணம் தெரியவில்லை என்று கை விரிக்கிறது போலீஸ்.
இத்தனைக்கும் தன்னுடைய உயிருக்கு ஆபத்து இருப்பதாக போலீஸில் ஏற்கனவே புகார் அளித்திருந்திருக்கிறார் ஷீலா மசூத்.லஞ்சத்தில் இருந்து நாட்டை காப்பாற்ற புறப்பட்ட ஷீலா மசூத்தை காப்பாற்ற நம் சனநாயகத்தால் முடியவில்லை.இந்தியாவெங்கும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் துணை கொண்டு அநியாயங்களை எதிர்த்து போராடியதற்காக மரணமடைந்திருக்கும் 12வது நபர் ஷீலா மசூத்.
நன்றி
கழுகார் பதில்கள்.
24-ஆகஸ்டு-11 ஜூனியர் விகடன்.
மேலும்http://www.inneram.com/2011081718445/ips-officer-behind-rti-activist-masood-murder
http://www.sivajitv.com/news/bopal-hasaray-aatharavaalar-murder.htm